இந்நிலையில், தி இந்து நாளிதழ் (ஆங்கிலம்) பேட்டியில் தனுஷ் கோட்டியான் கூறியதாவது:
“இலங்கையில் இந்திய அணியுடன் நெட் பவுலராக இருந்ததால் நான் நம்பிக்கையுடன் பந்து வீசினேன். சிறந்த பேட்டர்களுக்கு பந்து வீசினேன். அது பந்தைத் துல்லியமாகவும், நல்ல வேகம் மற்றும் திருப்பத்துடனும் வீச எனக்கு உதவியது.
நான் இந்திய அணியுடன் இலங்கையில் இருந்தபோது சாய்ராஜ் பஹுதுலே சார் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். இங்குள்ள செண்டர் ஆஃப் எக்சலன்ஸில் சுனில் ஜோஷி சாரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.
எனது பந்துவீச்சு கோணங்களில் ஓரளவு முன்னேற்றம் செய்துள்ளேன். ஓட்டத்தைத் தொடங்கும் முறையிலும் சிறிது மாற்றம் செய்துள்ளேன். காற்றின் போக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொண்டு வருகிறேன்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் என்னுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். இவை அனைத்தும் இப்போது எனக்கு உதவுகின்றன” என்று கோட்டியான் கூறினார்.














Leave a Reply